Thamizhan Endroru Inam |
---|
தமிழன் என்றொரு இனமுண்டு
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்றே அவனது வழியாகும்
அன்றே அவனது வழியாகும்
கலைகள் யாவிலும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
கலைகள் யாவிலும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலை பொருள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்
தமிழன் என்றொரு இனமுண்டு
மானம் பெரிதென உயிர் விடுவான்
மற்றவருக்காக துயர் படுவான்
மானம் பெரிதென உயிர் விடுவான்
மற்றவருக்காக துயர் படுவான்
தானம் வாங்கிட கூசிடுவான்
தருவது மேலென பேசிடுவான்
தானம் வாங்கிட கூசிடுவான்
தருவது மேலென பேசிடுவான்
தமிழன் என்றொரு இனமுண்டு
யாசிகள் தொழுதல் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்
நீதியும் உரிமையும் அந்நியர்க்கும்
நிறை குறையாமல் பண்ணினவன்
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு குணமுண்டு