Thanananthan |
---|
தானந்தன கும்மி கொட்டி
கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன் போட
அடி அம்மா முத்து முத்தா
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா
சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
தானாக பொண்ணுக சிக்கும்
மச்சினன் கைராசி
அதை நான் பாத்தேன் கண்ணுல சிக்கி
அப்படி உன் ராசி
சிறுவாணி கெண்டையப்போல
மின்னுது கண் ராசி
நீ சிரிச்சாக்க சில்லறை கொட்டும்
உத்தமி உன் ராசி
நான் வாங்கிடும் உள் மூச்சிலே
நீ சேரவே சூடாச்சுதே
வஞ்சி மனம் பூத்தாட
கெஞ்சி தினம் கூத்தாட
ஒண்ணுக்குள்ளே ஒண்ணு வந்து
உன் உயிரோட ஒட்டுதய்யா
தானந்தன கும்மி கொட்டி
கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன் போட
அடி அம்மா முத்து முத்தா
சுகம் கொஞ்சுது கொஞ்சுதம்மா
சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
ஆத்தாடி தஞ்சாவூரு
சொக்குற நெல்லாட்டம்
அட கூத்தாடும் வைகை ஆறு
பாடுற எம் பாட்டும்
தேரோடும் தென்மதுரை
சன்னிதி கண்டவனோ
அந்த ஊராண்ட உத்தமனின்
சந்ததி வந்தவனோ
உனை ஆள்வதே பெரும் பாடம்மா
ஊர் ஆள்வதே எனக்கேனம்மா
நெஞ்சத்திலே நீ ஆள
மஞ்சத்திலே நான் ஆள
காதலென்னும் ஆட்சிதனை
வானமும் கூட வாழ்த்துதம்மா
தானந்தன கும்மி கொட்டி
கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன் போட
அடி அம்மா முத்து முத்தா
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா
சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி
கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே