Thandhayaipppol |
---|
இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ
சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அனுபவமே இது தானா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அனுபவமே இது தானா
உண்ணாமல் உறங்காமல்
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த
தந்தை எங்கே
என் தந்தை எங்கே
கண்ணிமை போலே
என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
தந்தை கனலானார் விதி தானா
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஔவையின் பொன் மொழி வீணா
ஔவையின் பொன் மொழி வீணா