Thanga Nilavukkul |
---|
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததேஏ
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததேஏ
கொடி முல்லைக் கொடி
கட்டும் மன்னனோ
இன்பச் சிறை பட்டு திரை
இட்டக் கண்ணனோ
நிலவுக்குள் வண்ண மலருக்குள்
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததேஏ
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததேஏ
முத்துக்கள் கொட்டிய நட்சத்திரம்
அந்த நட்சத்திரம் என் பக்கம் வரும்
வித்துக்கள் கட்டிய முத்துச் சரம்
என் பக்கம் வந்து பொன் முத்தம் தரும்
ஒரு முத்துத்தான்
உடை பட்டுத்தான் பூவாய் மாறும்
அதை தொட்டுத்தான்
அணை கட்டித்தான் பாடும் ராகம்
வண்ணச் சிலை பெற்றுத் தரும்
அன்புச் சின்னக் கிளி
கலை கற்றுத் தரும்
அந்த வண்ணக் கிளி
சிந்திடாமல் வந்த தேனே
சொந்தமானேன் நான்
நிலவுக்குள் வண்ண மலருக்குள்
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததேஏ
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததேஏ
இந்தப் பூவைக்கு பூ வைத்துச்
சூடிடும் மாமனுக்கு
நல்ல தோகையின் தோகையில்
சொக்கிடும் மாமனுக்கு
அன்புக்கும் பங்குக்கு
ஆள் வரப் போகுது
அம்மா என் அப்பா
என்று ஆட்டிடப் போகுது
வெட்கத்தில் மின்னிடும் தங்கக் குடம்
அது தொட்டுத் தரும் முன் சொர்க்கம் வரும்
கற்பனை கட்டிய முல்லைச் சரம்
எனை கட்டிக் கொள்ள தன் கையை தரும்
பல வண்ணம்தான்
ஒரு எண்ணம்தான் பாலாய் ஊறும்
ஒரு செல்லம்தான்
இவன் செல்வம்தான் நாளை தோன்றும்
கன்னம் பதில் சின்னம்
பல என்று எண்ணித் தரும்
இன்னும் பல இன்பங்களை
சொல்லித் தரும்
முத்து மாலை நித்தம் போட
சித்தமானேன் நான்
நிலவுக்குள் வண்ண மலருக்குள்
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததேஏ
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததேஏ
கொடி முல்லைக் கொடி
கட்டும் மன்னனோ
இன்பச் சிறை பட்டு திரை
இட்டக் கண்ணனோ
நிலவுக்குள் வண்ண மலருக்குள்
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததேஏ
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததேஏ