Thangachi Sirithalae |
---|
தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே
தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே
எதற்காக எனக்காக
எதற்காகஎனக்காக
திரும்பும் திசையெல்லாம்
தென்றல் போல் ஓடியவள்
திரும்பும் திசையெல்லாம்
தென்றல் போல் ஓடியவள்
திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள்
திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள்
வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன்
வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன்
ஊமை நாடகத்தை உதடுகள் ஆடியதே
உதடுகள் ஆடியதே
தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே
எதற்காக எனக்காக
வசந்தம் சிரித்தாலே
வண்ணத்தேன் பூ மலரும்
வசந்தம் சிரித்தாலே
வண்ணத்தேன் பூ மலரும்
வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும்
அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும்
அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும்
அம்மம்மா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும்
அண்ணனின் மனம் குளிரும்
சிரித்தாலேசிரித்தாலே
ஒரு கண் அழுதாலே
மறு கண் கலங்காதோ
ஒரு கண் அழுதாலே
மறு கண் கலங்காதோ
உனக்கோர் துயர் என்றால்
எனக்கும் பொருந்தாதோ
உனக்கோர் துயர் என்றால்
எனக்கும் பொருந்தாதோ
நீ வந்த தாய் மடியும்
நான் வந்த மடிதானே
நீ வந்த தாய் மடியும்
நான் வந்த மடிதானே
இருமலர் பூத்ததவும்
ஒரு மரக் கிளைதானே
ஒரு மரக் கிளைதானே
தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே
எதற்காக எனக்காக