Thannanthaniyaga Oru Theevundu |
---|
தன்னந் தனியாக ஒரு
தீவுண்டு தீவுண்டு அதில்
நானுண்டு அலையின் ஓசை
அமைதி தேடும் தனிமையின்
பயணம் ஆரம்பம் ஆரம்பம்
எனக்கோர் துணையே நான்
தானே தன்னந் தனியாக ஒரு
தீவுண்டு தீவுண்டு
அன்பு காதல் சோலை
அந்த தீவில் இல்லை ஒற்றை
குயில் தான் யாரை தேடுமோ
இளவேனில் தூண்டும் இன்ப
சூழல் இல்லை என்னை தேற்ற
ராகம் பாடுமோ
பட்ட பகலாய் எரியுதே
நிலவு நெஞ்சில் கனலாய்
தகிக்குதே உறவு எங்கே
இங்கே உலகம் இங்கே
தனிமைக்கு துணையானேன்
தன்னந் தனியாக ஒரு
தீவுண்டு தீவுண்டு தன்னந்
தனியாக ஒரு தீவுண்டு
தீவுண்டு அதில் யாருண்டு
அலையின் ஓசை அமைதி
தேடும் தனிமையின் பயணம்
ஆரம்பம்
ஆஆ ஆஆ பத்து மாதம்
சுமந்த தாயின் வேதனை என்ன
செய்து ஈடு செய்வதோ அவள்
போன பின்பு நண்பன் தாங்கினான்
என்ன செய்து நன்றி சொல்வதோ
மண்ணில் கேட்டு
கிடைப்பதா அன்பு நானும்
கேட்காமல் வந்தது முன்பு
உறவாய் இங்கு அவனே
உண்டு காதல் தந்து நன்றி
சொல்வேன்
தன்னந் தனியாக
ஒரு தீவுண்டு அங்கு யார்
உண்டு அதில் நானுண்டு
அலையின் ஓசை அமைதி
தேடும் தனிமையின் பயணம்
ஆரம்பம் ஆரம்பம் எனக்கோர்
துணையே நான் தானே தன்னந்
தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு
தன்னந் தனியாக
ஒரு தீவுண்டு அங்கு யார்
உண்டு அதில் நானுண்டு