Thanneer Kudam Kondu (Female) |
---|
பாடலாசிரியர் : வாலி
ஆஆஆஆ லால்லால லாலா லால்லால லாலா
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள் துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும் தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும் நீரோடை காற்றாக நெஞ்சில் உலாவும் தெம்மாங்கு பாடல்கள் தெய்வீகம் ஆகும்
நீ கேட்கத்தானேஏ நிதம் பாடுவேனே தேனாக விழியே காயங்கள் ஆறும் கவலைகள் தீரும் தானாகவே நீங்காமல் காதில் ரீங்காரம் செய்யும் நான் பாடும் ஆலோலமே
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்
தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே தெய்வங்கள் சில நேரம் மனிதர்கள் போலே நேருக்கு நேராக தோன்றும் மண் மேலே
நான் இங்கு பார்த்தேன் நடமாடும் தெய்வம் நீதான் அய்யா நெஞ்சுக்குள் வைத்து தொழுகின்ற தோகை நான்தான் ஐயா நான் கொண்ட நன்றி என்னென்று சொல்ல வார்த்தைகள் கிடையாதைய்யா
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன் தெரியாத சேதி தெளிவாகச் சொன்னாள் துணையாக வந்தாள் பூந்தென்றல் பெண்ணாள்
தண்ணீர் குடம் கொண்டு தனியாகப் போனேன் தனியாக நான் போக துணை ஒன்று கண்டேன்