Tharai Irangiya

Tharai Irangiya Song Lyrics In English


தரை இறங்கிய
பறவை போலவே மனம்
மெல்ல மெல்ல அசைந்து
போகுதே கரை ஒதுங்கிய
நுரையைப் போலவே என்னுயிா்
தனியே ஒதுங்குகிறதே

தொடத்தொடதொட
தொலைந்து போகிறேன் எடை
எடை மிகக்குறைந்து போகிறேன்
அட இது என்ன உடைந்து சோ்கிறேன்
நகத்தின் நுனியில் சிலிா்த்து விடக்கண்டேன்

ஓ மாயா ஓ மாயா
நீ இல்லாமல் நான் இல்லை
மாயா ஓ மாயா ஓ மாயா
நீ இல்லாமல் நான் இல்லை
மாயா

நதியில் மிதக்கும்
ஓடம் என வானில் அலையும்
மேகம் என மாறத்துடிக்கும்
தேகம் கண்டேன் இதுவும்
புதிய உணா்வு அல்லவா

காதல் பேச்சில்
பொய் பூசுவாய் மயங்கும்
வேளையில் மை பூசுவாய்
விலக நினைத்தால் கண்
வீசுவாய் தவித்தேன் தவித்தேன்
கிடந்து தவித்தேன் தவித்தேன்
தவித்தேன் தவித்தேன் தவித்தேன்

எது எது என்னை
வருடி போவது எது எது
என்னை திருடி போவது
எது எது என்னை முழுதும்
சாய்த்தது நெருப்பும் பனியும்
நெருங்குகிறதே


திரு திருவென
விழித்து பாா்க்கிறேன்
திசை அனைத்திலும்
உன்னை காண்கிறேன்
நொடிக்கொரு முறை
துடித்து போகிறேன்
எனது பெயரையும்
மறந்து நடக்கின்றேன்

ஓ மாயா ஓ மாயா
நீ இல்லாமல் நான் இல்லை
மாயா ஓ மாயா ஓ மாயா
நீ இல்லாமல் நான் இல்லை
மாயா

அருகில் இருந்தால்
உன் வாசனை தொலைவில்
இருந்தால் உன் யோசனை
எனக்குள் தினமும் உன் பாவனை
இனிமேல் எனது பயணம் சுகமே

இதமாய் உணா்ந்தேன்
உன் காதலை முழுதாய் மாறுது
என் வானிலை இருவாில் யாரும்
யாரோ இல்லை கனவும் நினைவும்
இணைந்து வருதே வருதே வருதே