Thendralil Aadidum |
---|
தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம்
சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
என் தேவதை அமுதம்
சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
மன்னவன் உங்கள்
பொன்னுடலன்றோ இந்திரலோகம்
மன்னவன் உங்கள்
பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில்
அந்த மாறனின் கணையில்
ஏனிந்த வேகம்
ஏனிந்த வேகம்
தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
பாவையுடல் பாற்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பாவையுடல் பாற்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பனி சிந்தும் கனி கொஞ்சும்
பூவிதழில் தேன் பெறவோ
மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வரப் பார்த்திருந்தேன்
மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வரப் பார்த்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்துப்
பார்த்த விழி பூத்திருந்தேன்
தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ
காலை வரை கேட்பதுண்டோ
தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
கற்பகத்துச் சொலையிலே
பூத்த மலர் நீயல்லவோ
விழியென்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ
காவியத்து நாயகினின்
கட்டழகின் மார்பினிலே
சுகமென்ன சுகமென்று
மோகனப் பண் பாடியதோ
மோகனப் பண் பாடியதோ
தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம்
சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
இனி என்ன நாணம்