Thendralil Aadidum

Thendralil Aadidum Song Lyrics In English


தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்

தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம்
சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
என் தேவதை அமுதம்
சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்

மன்னவன் உங்கள்
பொன்னுடலன்றோ இந்திரலோகம்
மன்னவன் உங்கள்
பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில்
அந்த மாறனின் கணையில்
ஏனிந்த வேகம்
ஏனிந்த வேகம்

தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்

பாவையுடல் பாற்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பாவையுடல் பாற்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ
பனி சிந்தும் கனி கொஞ்சும்
பூவிதழில் தேன் பெறவோ

மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வரப் பார்த்திருந்தேன்
மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வரப் பார்த்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்துப்
பார்த்த விழி பூத்திருந்தேன்

தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்


ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ

கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலை வரை கேட்பதுண்டோ
காலை வரை கேட்பதுண்டோ

தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்

கற்பகத்துச் சொலையிலே
பூத்த மலர் நீயல்லவோ
விழியென்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ

காவியத்து நாயகினின்
கட்டழகின் மார்பினிலே
சுகமென்ன சுகமென்று
மோகனப் பண் பாடியதோ
மோகனப் பண் பாடியதோ

தென்றலில் ஆடும்
கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம்
சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
இனி என்ன நாணம்