Thookanaag Kuruvi |
---|
சின்னப் பொண்ணு சின்ன மாப்பிள்ள
சிரிச்சு கட்டின வீடு
அதை சிக்கில்லாம எடுத்து தந்தா
சென்ன பட்டணம் பாதி
ஹஹ்ஹஹாஹ் ஹஹ்ஹஹாஹ்
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மாஆ
அம்மம்மா நில்லம்மா வெட்கம் இனி ஏனம்மா
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
பூத்த மல்லிகை வேர்த்திருந்தது
நான் தொடும் போது
அது வேர்த்த முகத்தை போர்த்திக் கொண்டது
தேன் தரும் போது
ஏந்தும் கைகளில் சாந்தம் கொள்வது
உன் மனம் தானே
மனம் சாந்தம் கொண்டதும்
சரசம் செய்வதும் உன் விரல் தானே
கோடியிலே நீ ஒருத்தி
கொத்து விட்ட செம்பருத்தி
காளை ஒன்னு சாஞ்சதைய்யா
கன்னிப் பொண்ணு சேலை முட்டி
மனம் பாடிப் பாடி
தினம் தேடித் தேடி
என்னைக் கூடி கொஞ்ச வந்த மானே
பொன்னம்மா கண்ணம்மா பூவெடுத்து போடம்மா
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
ஊரு மெச்சிட சீரு வைத்திட நீ வர வேண்டும்
அடி சீரு வைத்திடும் தேதி ஒன்றினை நீ தர வேண்டும்
கூரப் பட்டுடன் ஓரக்கண்ணில் பார்த்திருப்பேனே
உன் கூந்தல் தொடங்கி பாதம் வரையில் நான் ரசிப்பேனே
பால் எடுத்து நான் கொடுத்து
பஞ்சணை மேல் கொஞ்சிடுவேன்
தேவியிடம் மண்டியிட்டு
தேவைகளை கெஞ்சிடுவேன்
அட போதும் போதும் இன்று
நாளை பார்ப்போம் என்று
நானும் தள்ளிப் படுத்தேனே
அம்மம்மா மாப்பிள்ளை ஏங்குவது நியாயமா
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மாஆ
அம்மம்மா நில்லம்மாவெட்கம் இனி ஏனம்மா
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா