Thoorigai Indri |
---|
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
யாரென நீ கேட்டால் பதில் ஒன்று இருக்கிறதே
அஜந்தா கேட்கிறதே அஜந்தா கேட்கிறதே
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
பெண் னானானன் னானன்னா
னானன்னா னானன்னா
இந்த நாள் நல்ல நாள்
மொழியின் வழி திறந்த நாள்
துன்பமே தொலைந்த நாள்
இசையின் மொழி பிறந்த நாள்
ஹோ ஹோஹோஹொ
ஹோ ஹோஹோஹொ
ஹோ ஹோஹோஹொஹோ
ஹோ ஹோஹோஹொ
ஹோ ஹோஹோஹொ
ஹோ ஹோஹோஹொஹோ
இரவினில் விழித்திடும் மின்மினிகள்
பகலினில் உறங்கிடப் போய் விடுமா
நறுமணம் பரப்பிடும்
குளிர் தென்றல்
இசையினில் உறங்கிடப் போய் விடுமா
மலையை உடைப்பவனும் கலைஞன் என்றால்
சிலை என அதற்கொரு உயிர் வருதே
சிலையை வடித்தவனும் மறைந்தாலும்
கலை என உலகினில் நிலைத்திடுதே
பறக்கும் பறவை சிறகுகள்
நிறங்களில் நாட்டியம் படைத்திடுதே
உயிரை இழக்கும் ஓசைகள்
இயற்கை தலை அசைக்க இதயம் மகிழுதே
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
யாரென நீ கேட்டால் பதில் ஒன்று இருக்கிறதே
அஜந்தா கேட்கிறதே அஜந்தா கேட்கிறதே
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
கண்கள் இல்லாமல் அறிந்ததெல்லாம்
கற்பனையாய் இங்கு ஆனதம்மா
உண்மையின் விழிகள் திறந்திடவே
கற்பனை குருடாய்ப் போனதம்மா
எனக்கு இரு விழியை தந்தவர்க்கு
அதற்கொரு நன்றி என்ன உண்டு
நினைக்க கண்ணில் வரும் நீர்த் துளியே
இதற்கும் மேல் இங்கு ஏது உண்டு
கண்கள் இல்லா மனிதர் எல்லாம்
விழி பெற வாழவே வழி சொன்னான்
உண்மையில் எந்தன் ஆசை எல்லாம்
புவியின் வழி தொடரும் இசையின் வழியம்மா
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்
யாரென நீ கேட்டால் பதில் ஒன்று இருக்கிறதே
அஜந்தா கேட்கிறதே அஜந்தா கேட்கிறதே
தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
உலகினை வரைந்தவன் யார்
வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி
இசை மொழி படைத்தவன் யார்