Thulli Kudhikkum En Maname

Thulli Kudhikkum En Maname Song Lyrics In English


என் மனமே என் மனமே
என் மனமே
துள்ளிக் குதிக்கும் என் மனமே
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
மலரின் மணத்தையா
தென்றல் காற்றின் சுகத்தையா
கண்ணன் தோளில் ஆடத் துடித்திடும்
அந்தத் துளசியையா
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

துள்ளிக் குதிக்கும் என் மனமே
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

ஹாஹாஹா
ஹாஹாஹா

எங்கோ கேட்கும் உன் கானம்
என்னைத் தானே வருத்தியது
தூங்கா நினைவில் தொடர்ந்து வந்தும்
எங்கோ என்னை துரத்தியது

என்னில் சுரக்கும் இசை எல்லாம்
உன்னால் தானே வந்ததம்மா
வெள்ளம் போல சூழ்ந்து வந்து
உன்னை என்னை நனைத்ததம்மா

இளமைக் கனவு இன்று வரை
தொடர்ந்து வந்ததே
இத்தனை நாள் தெரிந்ததெல்லாம்
மறந்து போனதே

ஒரு வார்த்தை இன்றியே
நாம் பேசிக் கொள்ளலாம்
ஒரு பார்வை போதுமே
நாம் வாழ்ந்து மலரலாம்


வீணை மீட்டும் விரல்கள் எல்லாம்
என்னைத் தானே மீட்டியது
தேனை எந்தன் நரம்புகளில்
ஊட்டாமல் ஏன் ஊட்டியது

கடலின் கரையில் மணல் வெளியில்
வானம் என்னை வாட்டியது
கனவாய் நனவாய் காலம் எல்லாம்
கலந்தே என்னை மீட்டியது

இளவயதின் நினைவு எல்லாம்
மறப்பதில்லையே
வளர்ந்த பின்னே மறந்த வனம்
மரமும் இல்லையே

ஒரு காலம் இன்றியே
நம் பயணம் தொடரலாம்
இன்ப நாதவெளியிலே
நாம் நடந்து போகலாம்

என் மனமேஎன் மனமே
என் மனமே
துள்ளிக் குதிக்கும் என் மனமே
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
மலரின் மணத்தையா
தென்றல் காற்றின் சுகத்தையா
கண்ணன் தோளில் ஆடத் துடித்திடும்
அந்தத் துளசியையா
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்

துள்ளிக் குதிக்கும் என் மனமே
நீ யாரைத் தேடி ஓடுகிறாய்