Thunbamellam

Thunbamellam Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்

துன்பமெலாம் நம் மனதை
சுத்தம் செய்யத் தான்
வலிய தோள் இரண்டும் இருப்பதெல்லாம்
தாங்கிக் கொள்ளத் தான்
மக்கள் மனை சுற்றம் எல்லாம் பற்று வைக்கத் தான்
மக்கள் மனை சுற்றம் எல்லாம் பற்று வைக்கத் தான்
பற்று வைப்பதெல்லாம் என்றோ விட்டு விடத் தான்
ஆ ஆ ஆ ஆ

உறவாடும் பண்பு தன்னை
உள்ளம் எல்லாம் சேர்த்து வைத்து
உறவாடும் பண்பு தன்னை
உள்ளம் எல்லாம் சேர்த்து வைத்து
ஒழுங்கான கூடு ஒன்றில்
உயிர் விளக்கேற்றி வைத்து
பாதுகாக்கச் சொல்லி யாரோ படைத்து விட்டான்
பாதியிலே கதை முழுதும் முடித்து விட்டார்
பலர் பாதியிலே கதை முழுதும் முடித்து விட்டார்


இரவு பகல் என்றே காலம்
மாறவில்லையா ஒன்றை
இழந்து பெறும் இன்பம்
இரண்டு பங்கில்லையா

இரவு பகல் என்றே காலம்
மாறவில்லையா ஒன்றை
இழந்து பெறும் இன்பம்
இரண்டு பங்கில்லையா
தோல்வி எல்லாம் வெற்றிக்கான படிகள் இல்லையா
தோல்வி எல்லாம் வெற்றிக்கான படிகள் இல்லையா
வள்ளுவன் துன்பம் வந்தால் சிரிக்கச் சொல்லி
பாடவில்லையா
வள்ளுவன் துன்பம் வந்தால் சிரிக்கச் சொல்லி
பாடவில்லையா