Thuyilladha Penn Ondru |
---|
துயிலாத
பெண்ணொன்று கண்டேன்
எங்கே
இங்கே
எந்நாளும் துயிலாத
பெண்ணொன்று கண்டேன்
எங்கே
இங்கே
எந்நாளும் துயிலாத
பெண்ணொன்று கண்டேன்
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்த கண் தந்த அடையாளம் போதும்
இந்த கண் தந்த அடையாளம் போதும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
நானா
ஆமாம்
எந்நாளும் துயிலாத
பெண்ணொன்று கண்டேன்
மாலைக்கு நோயாகி போனேன்
காலை மலருக்கு பகையாக ஆனேன்
உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
யாரோ
நீ தான்
எந்நாளும் துயிலாத
பெண்ணொன்று கண்டேன்
மணமேடை தனில் மாலை சூடும்
உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்
நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடி பயனேதும் இல்லை
அதில் நடமாடி பயனேதும் இல்லை
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
ஓஹோ
எந்நாளும் துயிலாத
பெண்ணொன்று கண்டேன்