Un Perai Kettaale |
---|
பெண் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது
பஞ்சணை நினைவுகள் ஓ ஓ
பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
பெண் வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
வெண்ணிலவைக் கண்டாலே
அங்கும் உந்தன் ரூபம்
வந்து வந்து சேராடும்
வாடும் உள்ளம் போராடும்
தென்றல் வந்து தொட்டாலே
அதிலும் உந்தன் மோகம்
கண் திறந்து தீ மூட்டும்
வந்து என்று தேரோட்டும்
பொன்னான கையை சேர்த்து
கண்ணே நீ சொர்கம் காட்டு
சொல்லாமல் சொன்னேனே தூது
நில்லாமல் வர வேண்டும் இப்போது
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது
பஞ்சணை நினைவுகள் ஓ ஓ
பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
பெண் வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது
பெண் ஆ ஆ ஆ ஆ
முத்து முத்துப் பல்லாக்கு
பட்டுப் பரிவாரம்
முத்திரைப் பொன் முத்தாரம்
மோகத்துக்கு ஆதாரம்
முன்னழகின் செல்வாக்கு
முந்துகின்ற நேரம்
என் மனதை தீண்டாதோ
ஏங்குகின்றேன் இந்நேரம்
கண்ணாலே வீணை மீட்டு
கல்யாணக் காதல் பாட்டு
இல்லாத தேனூற்று ஊற்று
சொல்லாமல் தாலாட்டும் காற்று
உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது
பஞ்சணை நினைவுகள் ஓ ஓ
பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா
பெண் வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது
இருவர் : உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது