Unnaiyandri |
---|
உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்
உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்
குலமகளென்று உலகமென்னைப்
போற்றுகின்றதேன்
நல்ல குணம் படைத்த அன்னையென்று
வாழ்த்துகின்றதேன்
இதயம் மட்டும் ஒன்றே எண்ணி
வாடுகின்றதே
அது இலை மறைந்த காயைப் போல
வாழுகின்றதே
உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்
காலம் ஒன்று தோன்றும்போது
உண்மையைச் சொல்வேன்
என் கருத்தினிலே உன்னைப் பதித்த
காரணம் சொல்வேன்
கருணையோடும் உரிமையோடும்
அணைத்துக் கொள்ளுவேன்
என் கண்ணிரண்டில் உன் வடிவை
எடுத்துக் கொள்ளுவேன்
உன்னையன்றி யாரிடம்
என் நிலையைச் சொல்வேன்
இந்த உறவிலுள்ள ரகசியத்தை
எவரிடம் சொல்வேன்