Uyiril |
---|
இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்
உயிரில்இளம் பூக்கள் பூக்கும்
மெதுவாய்பறித்துக் கொள்வாய்
உனக்காகப் பூத்த பூவை நான்
இதழ்தோறும் அறியாத சுகந்தம்
பார்வை ஒன்று வீசி
உயிரை மெல்ல பறித்துக் கொண்டு போடா
உனக்காகவே பிறந்தேன்
நீ தீண்டவே
பெண்ணாய் மலர்ந்தேன்
உனக்காகக் கனிந்தேன் நான்
உனக்கென தேகம் அடைந்தேன்
மடியில் உறங்க
மாதவம் செய்தேனோ
செய்தேனோ
நொடியில் அணைத்து
வயதினைக் கொல்வானோ கொல்வானோ
மோகத் தனலில்
தீயெனச் சுடுவானோ
சுடுவானோ
முத்தச் சுழலில்
படகென விடுவானோ
விடுவானோ
உன்னாலே உயிர்
உறைந்தேனே நான்
கொஞ்சம் உறைந்தேனே
கொஞ்சம் கரைந்தேனே
கொஞ்சம் தொலைந்தேனே
உன்னாலே உயிர்
உறைந்தேன் நான்
அறிந்தும் அறியாமல்
ஏதேதோ செய்வாயா செய்வாயா
சொல்வாயா சொல்வாயா
இப்போதே கொல்வாயா கொல்வாயா