Vaanum Mannum

Vaanum Mannum Song Lyrics In English


வானும் மண்ணும்
கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக்
கொண்டதே

ஒரு மூங்கில்
காடெறிய சிறு பொறி
ஒன்று போதும் அந்த
பொறி இன்று தோன்றியதே

காதல் இடம்
பார்ப்பதில்லை அது
இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று
பூத்திடுதே

ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ

நியாயமா இது
பாவமா என்று சொல்ல
யாரும் இங்கு இல்லை

மௌனமே
மொழியானதால் அட
பாஷை என்பதொரு
தொல்லை அடுத்தொன்று
தோன்றவில்லை

ஆ ஆ வெண்ணிலா
நீராற்றிலே என்றும் வீழ்ந்து
பார்த்தவர்கள் இல்லை

வெண்ணிலா
தங்க சேற்றிலே இன்று
வீழ்ந்து போனதொரு
தொல்லை இலக்கணம்
பார்க்கவில்லை

பிறக்கும்
மொட்டுகள் தேதி
பார்ப்பதுவும் இல்லை

ஆ ஆ உறவு
மாறலாம் உந்தன்
கையில் அது இல்லை


ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ

எவ்விடம் மழை
தூவலாம் என்று மேகம்
யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள்
கண்டு காதல் கூடுவது
உண்டோ உணர்ச்சிக்கு
பாதை உண்டோ

விதியினும்
காதல் வலியது இதில்
வேறு வாதம் ஒன்று
உண்டோ காதலின் திசை
ஆயிரம் அது கண்டு
சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ

காலம்
சொல்லுவதை காதல்
கேட்பதுவும் இல்லை

ஆ ஆ ஆசை
என்ற நதி அணையில்
நிற்பதுவும் இல்லை

ஒரு நீரோடை
மீனுக்கு கரை மேல்
ஆசை வந்தது இனி
என்னென்ன நேர்ந்திடுமோ

வானும் மண்ணும்
கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம்
ஒட்டிக் கொண்டதே