Valaikku Thappiya Meenu |
---|
வலைக்கு தப்பிய மீனு
மாமு
உலைக்கு வந்தது பாரு
ஹோய்
வலைக்கு தப்பிய மீனு
மாமு
உலைக்கு வந்தது பாரு
பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே
பொறந்தது வெண்ணீரிலே
மனுஷன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒன்றல்லவோ
அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ
வலைக்கு தப்பிய மீனு
மாமு
உலைக்கு வந்தது பாரு
ராமன் செய்த பாவமென்ன
வனவாசம் போனானே
திரௌபதியின் பாவமென்ன
செத்து செத்து நின்றாளே
தங்கம் உறுக்கப்படும்
தீயில் எரிக்கப்படும்
அதனால் பழுதில்ல
உண்மை வருத்தப்படும்
ரோட்டில் நிறுத்தப்படும்
அதனால் இழிவில்ல
அவமானம் கூட ஞானமாகும்
பிழையில்ல ஹோய்
வலைக்கு தப்பிய மீனு
மாமு
உலைக்கு வந்தது பாரு
சத்தியங்கள் தூங்கக் கூடும்
சத்தியமாய் சாகாது
புத்தகத்தில் உள்ளதெல்லாம்
புத்தி என்று ஆகாது
வெற்றி ஒதுங்கி நிற்கும்
சற்றே பதுங்கி நிற்கும்
அதனால் அழியாது
நத்தை வயத்துக்குள்ளும்
முத்து ஒளிந்திருக்கும்
அதுக்கே தெரியாது
பனி மூட்டம் என்றும்
வானை மூட முடியாது
வலைக்கு தப்பிய மீனு
மாமு
உலைக்கு வந்தது பாரு
வலைக்கு தப்பிய மீனு
மாமு
உலைக்கு வந்தது பாரு
பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே
பொறந்தது வெண்ணீரிலே
மனுஷன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒன்றல்லவோ
அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ