Valliyammai Vandha Kulam |
---|
மை பார்த்த கண்ணழகி மீனாட்சி அம்மனுக்கு கை பார்த்து குறி உரைச்ச குறவர் குலம் எங்கள் குலம் குறிஞ்சிப்பூ பூத்திருக்க கூட்டமா வண்டு வந்து உறிஞ்சே தேன் குடிக்கும் சுருளி மல எங்க மல ஆஆஆஆஆஆஆ
வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான் வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
நீலகண்டன் வெஷம் குடிச்சான் நீலி பலம்தான் திரிசூலி பலம்தான் நீலகண்டன் வெஷம் குடிச்சான் நீலி பலம்தான் திரிசூலி பலம்தான்
அவரு நிரந்தரமா இருக்குறதும் தாலி பலம்தான் ஆத்தா தாலி பலம்தான் அவரு நிரந்தரமா இருக்குறதும் தாலி பலம்தான் ஆத்தா தாலி பலம்தான்
வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான் ஆஹ் வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான்
உளுந்தூரு பேட்டையிலும் உடுமலையன் கோட்டையிலும் கடம்பூரு சந்தையிலும் கூட்டம் கூடுவோம் நாங்க ஆட்டம் ஆடுவோம்
டக்குடிக்காம் டமுக்குடிக்காம் டமுக்கு டிப்பான் டியாலோ பாசிமணி பவளமணி வாங்கி பாரு ஆயாலோ டக்குடிக்காம் டமுக்குடிக்காம் டமுக்கு டிப்பான் டியாலோ பாசிமணி பவளமணி வாங்கி பாரு ஆயாலோ
ஆஆஆஆஆஆஆ உளுந்தூரு பேட்டையிலும் உடுமலையன் கோட்டையிலும் கடம்பூரு சந்தையிலும் கூட்டம் கூடுவோம் நாங்க ஆட்டம் ஆடுவோம்
எந்த ஊரு சொந்த ஊரு எல்லா ஊரும் எங்க ஊரு எங்களுக்கும் கஞ்சி ஊத்த பூமியும் உண்டு சிவகாமியும் உண்டு
இருவர் : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான் ஆஹ்
எங்ககிட்ட பொண்ணெடுத்த ஏறுமயில் முருகனத்தான் ஈன்றெடுத்த தாயிருக்கா ஆனைக்காவிலே திருவானைக்காவிலே
சங்கடங்கள் வாராமே சமயத்திலே காப்பாத்த அங்கிருக்கும் தாயவளை கும்பிடுவோமே நாங்க நம்பிடுவோமே ஆமா சங்கடங்கள் வாராமே சமயத்திலே காப்பாத்த அங்கிருக்கும் தாயவளை கும்பிடுவோமே நாங்க நம்பிடுவோமே
இருவர் : வள்ளியம்மை வந்த குலம் எங்க குலம்தான் நாங்க வாழுறதும் அவ புருஷன் தந்த பலம்தான் ஆஹ்
போடு