Vanga Kadal |
---|
வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
தடுப்பவன் யாரடா
வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
எனக்கு ஒரு கவலை இல்லை போடா போ
எதிர்க்கிறவன் எவன் இருக்கான் வாடா வா
நேர்மையில் நெற்றி வேர்வையில்
நின்ற நேரம்தான்
பாரமாய் வந்து சேர்ந்ததே பழி பாவம்தான்
ஏழையாய் இரு கோழை ஆகினால்
காரித் துப்புவான் உன் மேலே
நாலு போடுதான் போட்டுப் பாரடா
மகுடம் சூடலாம் தலை மேலே
குனிந்தவன் நிமிர்ந்த பின்
எரிமலை வெடிக்குமடா
வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
தடுப்பவன் யாரடா
வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
தருமம் எல்லாம்
கடைச் சரக்காய் போயாச்சு
ஒழுக்கம் எல்லாம் படுத்த படி நோயாச்சு
நாணயம் இந்த நாட்டிலே
வெறும் ஏட்டிலே
வாய்மையே வெல்லும் என்பவன்
நடு ரோட்டிலே
நீதி தேவதை கண்ணை கட்டியே
மீதி தேவதை வென்றாச்சு
துஷ்ட தேவதை ரொம்ப பேருக்கு
இஷ்ட தேவதை என்றாச்சு
நடப்பது நடக்கட்டும்
அதற்கொரு முடிவெடுப்பேன் ஹா
வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
பொல்லாத சூரைக் காற்றுக்கு
எல்லாமே வழி விடும்
தடுப்பவன் யாரடா
வங்கக் கடல் பொங்கி எழ
வந்ததொரு பூகம்பம்
மின்னல் இடி கொட்டும் மழை
இன்று முதல் ஆரம்பம்