Varugiraal Unnai Thedi |
---|
பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி
தரணியின் மன்னவரும்
ஆஅஆஅஆஆஆஆஆஆஆ
தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார்
செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று
தோகை மனம் துணிந்து
தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார்
செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று
தோகை மனம் துணிந்து
வருகிறாள் உம்மைத்தேடி
கனிந்த கனியிருந்தும்
கண்கள் உமை அழைத்தும்
காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி
கனிந்த கனியிருந்தும்
கண்கள் உமை அழைத்தும்
காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி
உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு
உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு
ஊடலும் கூடலும் கொஞ்சிப் பாடலும்
மேவிய மாதிவள் காதலினால்
வருகிறாள் உம்மைத்தேடி
சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்
சந்ததம் காதல் சரச சங்கீதம்
சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்
சந்ததம் காதல் சரச சங்கீதம்
இருவர் ஆவி ஒருவராக நிலாவினில்
காதல் கொண்டு இன்பமே காணவும்
புதுமைக் கூறும் கலைகள் மேவி வாழவும்
காம வதன மோக நடனக் காவிய மயில்
பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி
பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி