Vazhkayilae Kashtapattu

Vazhkayilae Kashtapattu Song Lyrics In English


நேத்து பேஞ்ச மழையிலே
இன்னைக்கி முளைச்ச காளான்
என்னை பார்த்து
ஒரு கேள்வி கேட்டாளே

நான் வளர்த்த செடியிலே
மூணு இலை துளிர்க்கல
என்னை பார்த்து
ஒரு பாட்டு சொன்னாளே

வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்

ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது
வாழ்க்கையிலே கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா

தாவணி போட்ட என் தங்கச்சிக்கு
சேலையை உடுத்திவிட்டேன்
லாவணி பாடி என் தங்கத்துக்கு
தங்க காப்பையும் போட்டுவிட்டேன்

அந்த கையாலே என்னை அடிச்சாலும்
எதும் ஒரைக்காது அது வலிக்காது
ஒரு சொல்லாலே என்னை அடிச்சாளே
வடு மாறாது அது மறையாது
பாசம் நேசம் வேஷம் வேஷம்
பாடம் கிடச்சாச்சு
பந்தங்கள் போயாச்சு

வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்

ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது
வாழ்க்கையிலே கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா


 ஆஅஆஅஆஅ
ஆஆஆஅஆஅஆஅ
ஆஆஆஅஆஅஆஅ

போனால் போகட்டும் போடா என்று
பாட நான் ஒரு கவிஞன் இல்லை
ரகுபதி ராகவ ராஜாராம் பாட
நான் ஒரு காந்தியும் இல்லை

என் கட்சிதான்
அன்று ஆட்சியில்லை
இப்ப எதிர்கட்சி
நான் எங்க வீட்டினிலே
என் கட்சியில் இன்று யாருமில்லே

அந்த தங்கச்சியின்
பக்கம் நியாயமில்லே
குடும்பம் இங்கே கட்சியாச்சு
நடக்கும் ராஜாங்கம்
நலமாக வாழட்டும்

வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்

ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது

வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா