Vedithidum Bhoomi |
---|
வெடித்திடும் பூமியின்
காயங்கள் ஆறுமோ
ஆறாமலே போகுமோ
பாதை மாறிப் போகும்
முகில்களும்
மண்ணிலே தங்கிய ஈரமும்
தங்கித் திடலாகுமோ
மரங்கள் விறகாக கருகும் நேரங்கள்
மரங்கள் விறகாக கருகும் நேரங்கள்
நிழல்களும் வேகுதே தீயோடு
அகதியாய் இதயங்கள் அலையும் நிலை கண்டு
சிதறுது கண்ணீர் மூச்சோடு
மலராக ஒரு காலம் சருகாக ஒரு காலம்
இடையினில் இது என்ன பஞ்சமாய் ஓர் யுகம்
குழந்தைகள் விளையாட பொழியட்டும் தாய் மேகம்
புது வண்ணப் பூக்களால் குளிரட்டும் பூ வனம்
குளிரட்டும் பூ வனம்
வெடித்திடும் பூமியின்
காயங்கள் ஆறுமோ
ஆறாமலே போகுமோ
பாதை மாறிப் போகும்
முகில்களும்
மண்ணிலே தங்கிய ஈரமும்
தங்கித் திடலாகுமோ