Ventriduven Unnai |
---|
வென்றிடுவேன்
நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன் அந்த
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன்
விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்
என்னையும் உன்னையும் பாடிட வைத்திடுவான்
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
ஆஆஆஆஆ
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
நடித்தான் தமிழைப் படைத்தான்
இசையை வடித்தான் தன்னை மறந்தனவே
முத்தமிழ்ப் புலமை
சித்தனும் எனது
வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
ஆரபிமானம் கொள்வார்
ஆஆஆஆஆ
ஆரபிமானம் கொள்வார்
பெரும் அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
ஆரபிமானம் கொள்வார்
வெற்றி எட்டு திசை முட்டவே
பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா
தனித்து நினைத்து
மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தைக் கணக்கில் மறந்தனையே
ஆரபிமானம் கொள்வார்
ஷண்முகப் பிரியன் என்னும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
ஷண்முகப் பிரியன் என்னும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
நாடகமா தர்பார் நாடகமா
அடக்கு முறை தர்பார் நாடகமா
எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசமானால் ஆணவம் ஏன்
ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசமானால் ஆணவம் ஏன்
மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
மனோலயம் இல்லை உன் பாட்டினிலே
மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
மனோலயம் இல்லை உன் பாட்டினிலே
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
யார் வந்தால் என்ன காம்போதி
ஆஆஆஆஆ
யார் வந்தால் என்ன காம்போதி
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
கௌரி மனோகரி துணையிருப்பாள்
ஆஆஆஆஆ
கௌரி மனோகரி துணையிருப்பாள்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
தபமகரிஸரி மபததபமப
தபத ஸமமா
கமகஸ நிதநி ஸமகஸ
ஸமமா நீ ஸமமா
பநிஸரிமகரி ரிஸநிதப
நீ ஸரி ஸமமா
தநிஸநிதாநி தமகரிஸ
மதமா நீ ஸதமா
நிதபமகரிஸ மநிதா
நீ பாதக மநிதா
ஸரிகமகஸநித மபத
நிஸ்நிதநிமா பரிகாஸமா ஸாகஸமா
ஸகஸகஸநிபமபநிஸ்
பகரிஸநிதபம பதநிஸரி
நிஸகஸக நிஸககஸநிதா
ஸரிகமகரிஸ நிஸரிகம
கமகஸக
கரிஸகரி
பநிஸகஸ
பமகரிஸ