Vizhiye Nalama |
---|
விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்
இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்
இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்
விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன் உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி
ஒரு முள்ளில்லாத இமை நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா
இனி நாளும் இன்ப சுகம் நானும் உந்தன் வசம் வா கண்ணே
வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே
விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்
இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்
இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்
விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்
இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா அடடா தாகமோ அதில் தான் தீருமோ
இது வாடைக் காலமடி மோக தாகமடி நீ தந்தாய்
ஒரு ஆடை காற்றில் விழ ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்
அடியே கொடியே மடி மேல் என் சிம்மாசனம்
விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன் இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்
இடை நோயில் வாடுவதும் தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்
இரு கண்கள் பேசுவதும் கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்
விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்