Yaaradi

Yaaradi Song Lyrics In English




யாரடி நீ யாரடி
நீயடி என்னோட நாடி
ஓர் நொடி நீ கேளடி
நீயடி இனி நானடி

உன்னை முதல்
நாள் பார்த்து இதயம்
வேர்த்து மயங்கி போனேனே
இன்றோ உன்னை நான்
பார்த்து இதயம் கோர்த்து
பறந்து போனேனே

எந்தன் உடலில்
உந்தன் உயிரை சேர்த்து
புதிதாய் பிறந்தேனே
யாவும் மறந்தே
போனேன்



யாரடி நீ யாரடி
நீயடி என்னோட நாடி
ஓர் நொடி நீ கேளடி
நீயடி இனி நானடி

காதல் நீ சொல்லும்
போது கண்ணில் ஓர் மின்னல்
மோத கண்டேன் கண் கூசும்
கண்ணாடியே காதில் உன்
பேச்சை கேட்டால் காதல்
என் மூச்சி காற்றாய் மாறும்
அண்ணாந்து பார்க்கின்ற
ஆகாயம் நீ தானடி

முத்தம் மிட்டு
ஊதுகின்ற மூங்கில் நீ
உள்ளம் கிள்ளும் இசை
ஓ ஓ ஓ துக்கத்தை தூக்கில்
போடும் தேவதை உன்னோடு
உன்னோடு பூட்டி வச்ச
நெஞ்சை ஓசை இல்லாம
ஓடி போச்சே




மௌனம் உன்
மௌனம் பார்த்து ஞானம்
நான் கற்று கொண்டேன்
பெண்ணே கோவம் உன்
கோவம் பார்த்து குழந்தை
போல் மாறி விட்டேன்
கண்ணே தாய் இல்லா
பிள்ளைக்கு உன் காதல்
தாலாட்டு தான்

காதல் கல்வி கற்று
தந்த செல்வி நீ வாழும் காலம்
வரை ஓ ஓ ஓ வானம் விட்டு
பூமி வந்த தூறலே ஹே
உன்னாலே உன்னாலே
ஈரம் பட்டதாலே காதல்
காய்ச்சல் தான் கூடி போச்சே



யாரடி நீ யாரடி
நீயடி என்னோட நாடி
ஓர் நொடி நீ கேளடி
நீயடி இனி நானடி

உன்னை முதல்
நாள் பார்த்து இதயம்
வேர்த்து மயங்கி போனேனே
இன்றோ உன்னை நான்
பார்த்து இதயம் கோர்த்து
பறந்து போனேனே

எந்தன் உடலில்
உந்தன் உயிரை சேர்த்து
புதிதாய் பிறந்தேனே
யாவும் மறந்தே போனேன்