Yaarkku Yaar Endru |
---|
வந்தது யார் என் மனதில்
நின்றது யார் என் உயிரில்
ஆஹா தூவானம் தேன் தூவும்
என்ன புது தாகம் சுக ராகம்
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே
அமுதக் கடலில் சிறு படகு போல்
தினமும் மிதக்கிறேன் மிதக்கிறேன்
இதயக் கோவிலுக்குள் விளக்கு ஏற்றி வைக்க
அழைக்கிறேன் வரவேற்கிறேன் உன்னை
வா வா யாரும் இல்லாத
தீவுக்குள் வாசம் செய்வோம்
போவோமா கைகள் தான் கோர்த்து
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே
இமய மலை உயரத்திலே
பறக்கட்டும் நம் காதல் கொடி
ஏறி நின்று மகிழ்ந்த படி
வலம் வரட்டும் பருவக் கொடி
தினமும் உன்னை ரசித்த படி
என் பொழுது புலருமடி
உனது இதழ் பனி மழையில்
மன மலர்கள் மலருமடி
அன்பின் இழைகள் கொண்டு நான்
உனது சேலை நெய்கிறேன்
எந்தன் நெஞ்சின் தாளத்தை
உனது கொலுசில் கேட்கிறேன்
தூரல் போடும் சாரல் தூவும்
காதல் மேகங்கள் காதல் மேகங்கள்
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே
அமுதக் கடலில் சிறு படகு போல்
தினமும் மிதக்கிறேன் மிதக்கிறேன்
இதயக் கோவிலுக்குள் விளக்கு ஏற்றி வைக்க
அழைக்கிறேன் வரவேற்கிறேன் உன்னை
வா வா யாரும் இல்லாத
தீவுக்குள் வாசம் செய்வோம்
போவோமா கைகள் தான் கோர்த்து
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே
தலையணையாய் நான் கிடப்பேன்
நீ உறங்க மடி கொடுப்பேன்
இமை விலக இனிய இசை
உன் விரலில் இசைத்திடுவேன்
நகம் கடிக்கும் பொழுதினிலும்
முகம் சுளித்தால் துடி துடிப்பேன்
சிறு துரும்பாய் இமை கவிழ்ந்தால்
மனச் சிறகால் பட படப்பேன்
ஏதோ ஒன்று சொல்லடி
இதோ என்று செய்கிறேன்
விதை ஒன்று போடடி
தோட்டம் ஆக்கிக் காட்டுவேன்
உனக்கும் எனக்கும் அமையும் வாழ்க்கை
யார்க்கும் அமையாது யார்க்கும் அமையாது
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே
அமுதக் கடலில் சிறு படகு போல்
தினமும் மிதக்கிறேன் மிதக்கிறேன்
இதயக் கோவிலுக்குள் விளக்கு ஏற்றி வைக்க
அழைக்கிறேன் வரவேற்கிறேன் உன்னை
வா வா யாரும் இல்லாத
தீவுக்குள் வாசம் செய்வோம்
போவோமா கைகள் தான் கோர்த்து
யார்க்கு யார் என்று எழுதி வைத்த
ஓ பிரம்ம தேவனே
எனக்கு இவள் என்று எழுதி வைத்த
என் காதல் அறிஞனே