Yaarodu Yaaro Nee Entha Ooro |
---|
ஹா நிஸநிஸநிஸ நிஸநிஸநிஸ
நீஸ தநிஸ தநிஸ தாநி தஸநீ
தகதிமி தக தகதிமி தக தா
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
இளையவளே
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இனியவளே
உன் மௌனம் கூட ராகங்கள் தானா
தேவி என் தேவி சொல்வாயோ
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
மலை மீட்டும் வீணை
நீர்வீழ்ச்சி தானே
நான் மீட்டும் வீணை
உன் மேனி மானே
உனக்காகத் தானே ஆலாபனை
என் பாடல் உந்தன் ஆராதனை
மலர்கள் திறந்த போது
அதில் பிறந்து வளர்ந்த மாது
பருவம் அடைந்த கனவு
இவள் சலங்கை அணிந்த நிலவு
இதய வீட்டின் தீபம் இவளன்றோ
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
இளையவளே
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
மயில் ஆடக் கண்டு
மழை வந்ததென்ன
ரயில் பாதை எல்லாம்
ரதம் வந்ததென்ன
பூக் காடு எல்லாம் உந்தன் நிழல்
மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழல்
உறங்கிக் கிடந்த ராகம்
இன்று உன்னை நினைந்து பாடும்
கலைந்து போன மேகம்
இன்று வானில் வந்து கூடும்
பழகும் இதயம் உன்னை பிரியுமோ
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ
இளையவளே
உன் மௌனம் கூட ராகங்கள் தானா
தேவி என் தேவி சொல்வாயோ
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ