Yaaru Yaaru Ivano

Yaaru Yaaru Ivano Song Lyrics In English


ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ
ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ
ஹோ ஹோ வோவோவ ஹோ
ஹோ ஹோ வோவோவ ஹோ

யாரு யாரு இவனோ
நூறு நூறு வீரனோ
ஐந்து விரல் அம்புக் கொண்டு
அகிலம் வெல்பவனோ

யாரு யாரு இவனோ
நூறு நூறு வீரனோ
ஐந்து விரல் அம்புக் கொண்டு
அகிலம் வெல்பவனோ

சூரிய வட்டத்துக்குத்
தேய்பிறை என்றும் இல்லை
ஓயாத வங்கக்கடல்
ஓய்வாய் நிற்குமோ
உச்சத்தை தீண்டும் வரை
அச்சம் தேவை இல்லையேஏ

நெற்றியில் போட்டு வைத்த
உன் தாய் நெஞ்சில் உண்டு
வெற்றியை வாங்கித்தரும்
தந்தை உண்டடா
ஊருக்குள் தண்ணீர் இல்லா கண்கள்
உந்தன் கண்கள்தான்ஆஅஆஅ

ஒற்றைக் கண்ணில் தூங்கிடு
உன்னை நீயே தாங்கிடு
நீண்ட வாழ்க்கை வாழ்ந்திடு
ஹே நீயா நானா பார்த்திடு



ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ
ஹோ ஹோ வாவ் வோவ்வு ஹோ
ஹோ ஹோ வோவோவ ஹோ
ஹோ ஹோ வோவோவ ஹோ

வேங்கை புலி இவனோ
வீசும் புயல் இவனோ
தாகம் கொண்டு தீயைத் தின்று
வாழும் எரிமலையோ



நீ கொண்ட கைகள் ரெண்டும்
யானைத் தந்தங்கள்
கைக் கொண்ட ரேகை எல்லாம்
புலியின் கோடுகள்
நீ போட்ட எல்லைக் கோட்டை
எவன்தான் தாண்டிடுவான்ஆன்

புத்தனின் போதனைகள்
கொஞ்சம் தள்ளி வைப்பாய்
அய்யனார் கத்தி என்ன
ஆப்பிள் வெட்டவா
உன் பார்வை சுட்டெரித்தால்
பாறை கூழாங்கற்கள்தான்