Yaavum Yaavumey |
---|
யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய்
ராதை வந்ததாலா
நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா
ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா
பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா
என்னில் வேறு
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா
மொத்த வாழ்க்கையே
சுகமடா
நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலாஹேய்
தம் தம் இருதயம்
புதியதா
சந்தம் ஒலித்ததா
நம் நம் ஆனந்தம்
இணைந்ததால்
பந்தம் விளைந்ததா
தாலாட்டி தலை நீவி
தாங்கும் தாய் மடி நீ
மூழ்காமல் நான் பெற்ற
மூத்த பிள்ளையே நீ
சீர் வாங்கினேன்
வாழ்க்கையை காதலா
நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலாஹேய்
உலகம் தொடங்குதே உன்னிலே
பாதம் வையடா
வானம் திறந்ததே உனக்கென
என்றும் வெல்லடா
நீ ஏற என் தோள் ஏணி
வானம் தொட்டு வா நீ
நீ கோடி விதை தூவி
தோட்டமாகும் பூமி
பூங்காற்றிலே கழுவலாம் இதயமே
யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா
ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா
பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா
என்னில் வேறு
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா
மொத்த வாழ்க்கையே
சுகமடா