Yeanoo |
---|
ஏனோ
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே
ஏன் ஏனோ
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே
ஏனோ
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே
ஏன் ஏனோ
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே
இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இடுகாட்டில் கூட
இடங்களில்லா நரகமா
பறவைக்கும் எறும்புக்கும் கூட
வீடு உண்டு
அது வாடகை தந்ததுண்டா
அது பார்க்கும் இடங்களெல்லாம்
தனக்கு என்று
தனி வேலிகள் போட்டதுண்டா
ஆறறிவு மனிதன் ஏன்
அலைகிறான் தவிக்கிறான்
அத்தனையும் தனக்கென்றே
உலகிலே நினைக்கிறான்
இறுதியில் இறந்து போகையில்
இடுகாட்டில் இடம் இல்லாமல்
சாம்பலாகிறான்
ஏனோ
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே
ஏன் ஏனோ
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே
ஏனோ
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே
ஏன் ஏனோ
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே
இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இடுகாட்டில் கூட
இடங்களில்லா நரகமா