Aadavan Uthithan Malai |
---|
பாடகர்கள் : டி எம் சௌந்தராஜன் மற்றும் பி சுஷீலா
இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆதவன் உதித்தான் மலை மேலே இந்த அழகு கோபுர சிலை மேலே ஆதவன் உதித்தான் மலை மேலே இந்த அழகு கோபுர சிலை மேலே
இதில் ஆட நினைக்குது ஆசை மனம் ஆட நினைக்குது ஆசை மனம் அது அறியாதோ வரும் அஸ்தமனம்
ஆதவன் உதித்தான் மலை மேலே
அழகிய மலர்கள் சிரிக்கின்றன அவை அடுத்த உலகையே நினைக்கின்றன அழகிய மலர்கள் சிரிக்கின்றன அவை அடுத்த உலகையே நினைக்கின்றன பழகிய கிளிகள் துடிக்கின்றன பழகிய கிளிகள் துடிக்கின்றன எங்கோ பறக்கச் சிறகை விரிக்கின்றனஹாஹாஹா
ஆதவன் உதித்தான் மலை மேலே
வானில் பறக்குது வெள்ளைப் புறாஆஅ வானில் பறக்குது வெள்ளைப் புறா வேடன் வலையை விரித்தது அறியாமல் வானில் பறக்குது வெள்ளைப் புறா வேடன் வலையை விரித்தது அறியாமல் ஆடிக் களிக்குது தோகை மயில் ஆடிக் களிக்குது தோகை மயில் தன் ஆட்டம் முடிவது தெரியாமல் தன் ஆட்டம் முடிவது தெரியாமல்
ஆதவன் உதித்தான் மலை மேலே இந்த அழகு கோபுர சிலை மேலே இதில் ஆட நினைக்குது ஆசை மனம் அது அறியாதோ வரும் அஸ்தமனம்
ஆதவன் உதித்தான் மலை மேலே
இதயம் எதையோ நினைக்கின்றது அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது? இதயம் எதையோ நினைக்கின்றது அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது? புதிய பாதை தெரிகின்றது புதிய பாதை தெரிகின்றது அது போகும் பொழுதே முடிகின்றதே