Aadi Paadum Azhagana |
---|
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு
எந்தன் கண்ணில் ஒளி நீ என்று உணர்ந்து கொள்ளம்மா மண்ணில் உயிரும் நீயம்மா
தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன் நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்
ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு
கல்யாண எழில் மேடை நீ காணவே இந்த கண்ணோடு கனவொன்று நான் காண்கிறேன் தாயாக நீ மாறும் திருநாளிலே இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன்
ஆசைகளோ இசை பாடுமே ஆசைகளோ இசை பாடுமே அழியாத உன் வாழ்க்கை கலைக்காவியம் எழில் ஓவியம்
ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு
நீதானே நான் கண்ட திருச்சன்னதி அண்ணன் நீயின்றி எனக்கேது மன நிம்மதி உன் அன்பு வற்றாத தலைக்காவிரி என்றும் உனைப்போல ஒரு சொந்தம் வருமோ இனி
மறு ஜென்மங்கள் உண்மை என்றால் மறு ஜென்மங்கள் உண்மை என்றால் உன் தங்கை நானாக வரவேண்டுமே வரம் வேண்டுமே
ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு
எந்தன் கண்ணில் ஒளி நீ என்று உணர்ந்து கொள்ளம்மா மண்ணில் உயிரும் நீயம்மா
தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன் நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்
ஆடி பாடும் ஆரிராரிரோ