Aadiyile Perukkeduthu

Aadiyile Perukkeduthu Song Lyrics In English


 பாடல் ஆசிரியர் : வாலி

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக

மொய் குழலில் மலர் சூட்டி மான் விழியில் மை தீட்டி மொய் குழலில் மலர் சூட்டி மான் விழியில் மை தீட்டி பொன் முகத்தில் பொட்டு வைத்து பூவையர்கள் நலம் காக்க

பொன் முகத்தில் பொட்டு வைத்து பூவையர்கள் நலம் காக்க

நெய் வழியும் கை விளக்கை நீரோடு மிதக்க விட்டோம்

நெய் வழியும் கை விளக்கை நீரோடு மிதக்க விட்டோம்

நாயகனின் உயிர் காக்க தாயிடத்தில் தூது விட்டோம்

நாயகனின் உயிர் காக்க தாயிடத்தில் தூது விட்டோம் ஆ,ஆஆஆஆஆஆ

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக


வள்ளுவனின் வாசுகி போல் வசிஷ்டனுக்கு அருந்ததி போல்

வள்ளுவனின் வாசுகி போல் வசிஷ்டனுக்கு அருந்ததி போல்

தொல்லுலகில் புகழ் விளங்க தோகையர்க்கு துணை புரிக

தொல்லுலகில் புகழ் விளங்க தோகையர்க்கு துணை புரிக

பின்னுறங்கி முன் விழித்து பிள்ளை நலம் தனைக் காத்து

பின்னுறங்கி முன் விழித்து பிள்ளை நலம் தனைக் காத்து

கொண்டவனின் மனமறிந்து தொண்டு செய்யும் மனம் தருக

கொண்டவனின் மனமறிந்து தொண்டு செய்யும் மனம் தருக

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக