Aadura Maattai Aadi Karakkanum |
---|
பாடலாசிரியர் : எ மருதகாசி
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும் ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்
அறிவும் திறமையும் வேணும் எதுக்கும் அறிவும் திறமையும் வேணும் அறிவும் திறமையும் வேணும் எதுக்கும் அறிவும் திறமையும் வேணும்
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்
காடு மேடாக தரிசாக கிடந்த மண்ணு நெற் களஞ்சியமானது எப்படியென்று எண்ணு காடு மேடாக தரிசாக கிடந்த மண்ணு நெற் களஞ்சியமானது எப்படியென்று எண்ணு
அது பாடுபடும் விவசாயிகள் திறமையினாலே அது பாடுபடும் விவசாயிகள் திறமையினாலே நல்ல பலனுண்டு நாமிதை உணர்ந்து நடப்பதனாலே
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்
மண்ணோடு மண்ணாக மங்கி கிடக்கிற பொன்னு இளம் மங்கையர் அணியும் நகைகளாவதை எண்ணு மண்ணோடு மண்ணாக மங்கி கிடக்கிற பொன்னு இளம் மங்கையர் அணியும் நகைகளாவதை எண்ணு
அது மின்னுவதெல்லாம் தொழிலாளி திறமையினாலே அது மின்னுவதெல்லாம் தொழிலாளி திறமையினாலே புது மெருகு கிடைப்பதும் கையாளும் முறைகளினாலே புது மெருகு கிடைப்பதும் கையாளும் முறைகளினாலே
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்
மண்ணையும் பொன்னையும் போன்றவளேதான் பெண்ணும் அவள் மனதை அறிந்தாலே வசப்படுத்தலாம் ஆணும் மண்ணையும் பொன்னையும் போன்றவளேதான் பெண்ணும் அவள் மனதை அறிந்தாலே வசப்படுத்தலாம் ஆணும்
இதை எண்ணி பாராமல் பேசுவதால் பலன் இல்லைஆஆ இதை எண்ணி பாராமல் பேசுவதால் பலன் இல்லை பெண்ணிடம் இருக்கும் குறைகளை மாற்றுவது ஆண்களின் வேலை பெண்ணிடம் இருக்கும் குறைகளை மாற்றுவது ஆண்களின் வேலை
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்
அறிவும் திறமையும் வேணும் எதுக்கும் அறிவும் திறமையும் வேணும்
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும்