Aagaayam Yaenadi |
---|
ஆகாயம் ஏனடி அழுகின்றது
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது
அன்பே என் அன்பே அழுவது ஆகாது
காவல் நான்தானே கலங்குதல் கூடாது
ஆகாயம் ஏனடி அழுகின்றது
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது
அன்பே என் அன்பே அழுவது ஆகாது
காவல் நான் தானே கலங்குதல் கூடாது
ஏனோ வாழ்வில் இனி என்ன ஆசை
கண்ணீர் தானே விழிகளின் பாஷை
இருளை பார்த்து பயம் என்ன மானே
இனிமேல் இங்கே வளர்பிறைதானே
என்றாலும் நான் போக ஊர் இல்லையே
இனி எந்தன் கண்கள் சிந்த நீர் இல்லையே
அன்பே என் அன்பே அழுவது ஆகாது
காவல் நான் தானே கலங்குதல் கூடாது
வானம் இன்று பொழிந்தது என்ன
பூக்கள் கொஞ்சம் நனைந்தது என்ன
இதயம் தூங்க மறுப்பது என்ன
இருந்தும் பெண்மை மறைத்தது என்ன
நீரோடு நீர் சேர்ந்தால் பாவமில்லை
இனி நம்மை கேள்வி கேட்க ஆளுமில்லை
அன்பே என் அன்பே நான் அழுவது ஆகாது
காவல் நீதானே நான் கலங்குதல் கூடாது
அஹஹ ஆகாயம் ஏனடி அழுகின்றது
அதில் உந்தன் கண்ணீர் ஏன் விழுகின்றது
அன்பே என் அன்பே அழுவது ஆகாது
ம்ஹ்ஹீம்
காவல் நான் தானே கலங்குதல் கூடாது