Aagasa Panthalile Aayiram

Aagasa Panthalile Aayiram Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எஸ் வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் ஆனாலும் நிலவு வந்தா அல்லியைத்தான் பார்த்திருக்கும் ஆகாசப் பந்தலிலே

தென்றல் வந்து ஊஞ்சல் கட்ட ஆலமரம் விழுது விடும் தென்றல் வந்து ஊஞ்சல் கட்ட ஆலமரம் விழுது விடும் தேன் குயில்கள் பாட்டிசைக்கவே தேன் குயில்கள் பாட்டிசைக்கவே தென்னை மரம் தலை அசைக்கும் தென்னை மரம் தலை அசைக்கும் ஆகாசப் பந்தலிலே


தாமரையில் தேன் எடுக்க வண்டு வந்து சத்தமிடும் தாமரையில் தேன் எடுக்க வண்டு வந்து சத்தமிடும் பூ விரியும் நேரத்திலே பூ விரியும் நேரத்திலே பொறுத்திருந்து முத்தமிடும் பொறுத்திருந்து முத்தமிடும் ஆகாசப் பந்தலிலே

நெல் விளைய புல் விளைய நீரோடை நிலம் கிழிக்கும் நெல் விளைய புல் விளைய நீரோடை நிலம் கிழிக்கும் அலைகளிலே மேடை கட்டியே அலைகளிலே மேடை கட்டியே அன்னமெல்லாம் கதையளக்கும் அன்னமெல்லாம் கதையளக்கும்

ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் ஆனாலும் நிலவு வந்தா அல்லியைத்தான் பார்த்திருக்கும் ஆகாசப் பந்தலிலே