Aagaya Gangai Indru Mannil |
---|
இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது உள்ளம் இரண்டும் ஆடட்டும் ஒன்றில் ஒன்று கூடட்டும் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா இருவர் : ஹே
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது உள்ளம் இரண்டும் ஆடட்டும் ஒன்றில் ஒன்று கூடட்டும் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா இருவர் : ஹே
மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து ஹா மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து மன்மத மந்திரம் மயங்கிட படித்து ஹா வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து மன்மத மந்திரம் மயங்கிட படித்து
பாடம் சொல்லக் கூடாதோ பார்வை ஒன்று போதாதோ
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது
எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு என்னை உன் இடை என்னும் சிறையினில் பூட்டு ஹா எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு என்னை உன் இடை என்னும் சிறையினில் பூட்டு மங்கல இசை தரும் வீணையை மீட்டு மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு ஹா மங்கல இசை தரும் வீணையை மீட்டு மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு
மாலை தென்றல் தீயாக காணும் இன்பம் நீராக
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது உள்ளம் இரண்டும் ஆடட்டும் ஒன்றில் ஒன்று கூடட்டும் ஆஹா ஆஹா லாலாலா ஆஹா இருவர் : ஹே