Aagayam Boomi Endrum |
---|
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானேஏஏஏஏ
கேட்கின்ற கேள்வி இது
நானே கேட்கின்ற கேள்வி இது
சாமந்திப் பூவோ எட்டாத தூரம்
ஊமத்தம் பூவோ என் வீட்டின் ஓரம்
இதில் வாசம் இல்லை என் நெஞ்சில் பாசம் இல்லை
அது பக்கம் இல்லை நான் சூட யோகம் இல்லை
இது மேடை இன்றி ஆடும் நாடகம்
வானத்து மீனை வலை போடச் சொன்னால்
நான் எங்கு போவதம்மா
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
வேதங்கள் எல்லாம் பேதங்கள் பேசும்
நாம் வாழும் நாட்டில் ஏன் இந்தக் காதல்
இது சேரிக் காற்று ஊருக்கு ஆகாதம்மா
இது ஏரித் தண்ணீர் முத்துக்கள் இங்கேதம்மா
கடல் மீனும் அந்த வானில் நீந்துமோ
நீ கொண்ட காதல் நீரல்ல கானல்
தாகத்தை தீர்ப்பதுண்டோ
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானேஏஏஏஏ
கேட்கின்ற கேள்வி இது
நானே கேட்கின்ற கேள்வி இது