Aahaa Nam Aasai Niraiverumaa

Aahaa Nam Aasai Niraiverumaa Song Lyrics In English


ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா

அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை
வல்லூராக தோன்றுமோ
ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை
வல்லூராக தோன்றுமோ

வல்லூரானதை வனத்தில் வாழும்
வேடனாகி நான்
வல்லூரானதை வனத்தில் வாழும்
வேடனாகி நான்
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்

ஆஆஅஆஅஆஅஆஅஆஅ
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா

அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா

அருமை மொழி காதில்
அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே


அழகே நீரோடை அதில் நீந்தும்
மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே

அருமை மொழி காதில்
அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே

அழகே நீரோடை அதில் நீந்தும்
மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே

ஆஉமது ஆனந்தமே
அழியா செல்வமே
உமது ஆனந்தமே அழியா செல்வமே

ஆருயிரே நான் உனக்கு சொந்தமே
என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே

இருவர் : ஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஆஆஅ
ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்
நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்