Aahaa Nam Aasai Niraiverumaa |
---|
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை
வல்லூராக தோன்றுமோ
ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை
வல்லூராக தோன்றுமோ
வல்லூரானதை வனத்தில் வாழும்
வேடனாகி நான்
வல்லூரானதை வனத்தில் வாழும்
வேடனாகி நான்
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்
ஆஆஅஆஅஆஅஆஅஆஅ
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையை போலே
மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா
அருமை மொழி காதில்
அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே
அழகே நீரோடை அதில் நீந்தும்
மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே
அருமை மொழி காதில்
அமுதாக பாய்வதால்
அகமே மகிழ்தேன் அத்தானே
அழகே நீரோடை அதில் நீந்தும்
மீனை போல்
ஆனந்தமானேன் என் கண்ணே
ஆஉமது ஆனந்தமே
அழியா செல்வமே
உமது ஆனந்தமே அழியா செல்வமே
ஆருயிரே நான் உனக்கு சொந்தமே
என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே
இருவர் : ஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஆஆஅ
ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்
நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம்
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்