Aan Kaviyai Vella |
---|
கல் தோன்றி மண் தோன்றும்
முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும்
கன்னி இளமையிலே
சொல்லோடு பொருள் ஏந்தி
விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே
நின் திருவடிகள் வாழ்க
பொதிகை மலை உச்சியிலே
புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வான் ஏறி
தவழ்ந்து வரும் நிலவே
மதி அறியா திருமகளும்
கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று
வாழ்த்துவாய் தாயே
ஆங் நடக்கட்டும்
ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை
மறைந்து நின்று
சபையினிலே தருக
பெண் கவியை வெல்ல வந்த
பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக
இலை இல்லாமல் பூத்த மலர்
என்ன மலரம்மா
அது இளமை பொங்க
வீற்றிருக்கும் கன்னி மலர் ஐயா
வலை இல்லாமல் மீனை பிடிக்கும்
தேசம் என்ன தேசம்
அது வாலிபரின் கண்ணில் உள்ள
காதல் என்னும் தேசம்
ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக
உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக
காதல் வந்தால்
மேனியிலே என்ன உண்டாகும்
அது கன்னியரை கண்டவுடன்
கால்கள் தள்ளாடும்
காதலித்தாள் மறைந்துவிட்டாள்
வாழ்வு என்னாகும்
அன்பு காட்டுகின்ற வேறிடத்தில்
காதல் உண்டாகும்
ஒரு முறைதான்
காதல் வரும் தமிழர் பண்பாடு
அந்த ஒன்று எது
என்பதுதான் கேள்வி இப்போது
வருவதெல்லாம் காதலித்தால்
வாழ்வது எவ்வாறு
தன் வாழ்க்கையையே
காதலித்தால் புரியும் அப்போது
ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக
உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக
உன்னுடைய கேள்விக்கெல்லாம்
அவங்க பதில் சொல்லிட்டாங்க
இனிமே அவங்க கேள்வி கேக்கலாமில்ல
ம்ம் கேக்க சொல்லுங்க
தாதி தூது
தீது தத்தும்
தத்தை சொல்லாது
தூதி தூது ஒத்தித்தது
தூது செல்லாது
என்னாது
தேது தித்து தொத்து
தீது தெய்வம் வராது
ஓஹோ ஹோ
இன்று துத்தி தத்தும்
தத்தை வாழ தித்திததோது
என்னப்பா இது
கேள்வியா இது என்ன உளறாங்க
ஹ்கும்ம் அவங்க ஒன்னும் உளறல
நீதான் திணர்ற
நான் திணர்றதாவது
பின்ன என்ன வேணுமனா
நீ தோல்விய ஒப்புக்க
அவங்களே அர்த்தம் சொல்றாங்க
முதல்ல அர்த்தத்தை
சொல்ல சொல்லுங்க அப்புறம் பேசலாம்
சரி சொல்லுங்க
அடிமை தூது
பயன்படாது கிளிகள் பேசாது
அன்பு தோழி தூது சென்றால்
விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது
நின்றால் பயன் இருக்காது
இளம் தேமல் கொண்ட கன்னி வாழ
இனியது கூறு
பெண் கவியை வெல்ல வந்த
பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக