Aanaiyittal Aadukkiren

Aanaiyittal Aadukkiren Song Lyrics In English


ஆஆஆஆ
ஆஆஆஆஆ
ஆஆஆஆ

ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்

மாலையிட்ட பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறேன்
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்

தாரத்தை சபையில் பணயம் வைத்த
அந்த தருமன் இறந்தானே
இங்கு மறுபடி பிறந்தானே

திரௌபதி மானம் காப்பதற்கு
அந்த கண்ணன் வந்தானே
இந்த மங்கையின் மானம் காப்பதற்கு
அந்த அன்னை வருவாளா
மருவூர் அன்னை வருவாளா
வருவாளா வருவாளா

ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்


சந்தையில் மனைவியை விற்றுவிட்டோ
அரிச்சந்திரன் இறந்தானே
அவன் சந்ததி இழந்தானே

ஆடவர் கையில் பூவையர் என்றும்
அடிமை பொருள்தானா
இதை ஏனென கேட்க நீ இல்லையோ
உன் மௌனம் முறைதானா
மருவூர் தாயே சரிதானா
சரிதானா சரிதானா

ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்

மார்போடணைத்து பால் கொடுத்த
உன் தாயும் பெண்தானே
அந்த இனமும் நான்தானே
பெற்றவள் பேரை கெடுப்பதற்கு
எந்த பிள்ளையும் நினைப்பானா
மற்றவர் தாரம் தாயல்லவா
இதை மறந்தே தொடுவானா
மருவூர் தாய்தான் விடுவாளா
விடுவாளா விடுவாளா

ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
மாலையிட்ட பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறேன்