Aanaiyittal Aadukkiren |
---|
ஆஆஆஆ
ஆஆஆஆஆ
ஆஆஆஆ
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
மாலையிட்ட பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறேன்
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
தாரத்தை சபையில் பணயம் வைத்த
அந்த தருமன் இறந்தானே
இங்கு மறுபடி பிறந்தானே
திரௌபதி மானம் காப்பதற்கு
அந்த கண்ணன் வந்தானே
இந்த மங்கையின் மானம் காப்பதற்கு
அந்த அன்னை வருவாளா
மருவூர் அன்னை வருவாளா
வருவாளா வருவாளா
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
சந்தையில் மனைவியை விற்றுவிட்டோ
அரிச்சந்திரன் இறந்தானே
அவன் சந்ததி இழந்தானே
ஆடவர் கையில் பூவையர் என்றும்
அடிமை பொருள்தானா
இதை ஏனென கேட்க நீ இல்லையோ
உன் மௌனம் முறைதானா
மருவூர் தாயே சரிதானா
சரிதானா சரிதானா
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
மார்போடணைத்து பால் கொடுத்த
உன் தாயும் பெண்தானே
அந்த இனமும் நான்தானே
பெற்றவள் பேரை கெடுப்பதற்கு
எந்த பிள்ளையும் நினைப்பானா
மற்றவர் தாரம் தாயல்லவா
இதை மறந்தே தொடுவானா
மருவூர் தாய்தான் விடுவாளா
விடுவாளா விடுவாளா
ஆணையிட்டால் ஆடுகிறேன்
அழுத வண்ணம் பாடுகிறேன்
மாலையிட்ட பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறேன்