Aanandam Aanandam |
---|
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவே
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே
வசந்தம் வந்தது
அன்போடு பாசம் சேர்ந்திட
ஊரும் பேரும் வாழ்த்திட
வாழைப்போல வாழ்கவே
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரோ
பாலூட்டும் போது நான் பார்க்கவோ
தாலாட்டும் போது நான் தூங்கவோ
மலரும் அரும்பு மடிமீது
இனிக்கும் கரும்பு கொடுத்தாயே
இணைந்த சொந்தமே
கொண்டாடும் நேரும் காலமே
தெய்வம் தந்த பேரின்பம்
தேடி தேடி வந்ததே
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளைதான் வந்தது