Aanandha Yazhai

Aanandha Yazhai Song Lyrics In English




ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து
பேசிட உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும்
பனியில் தெரியும் மழையின்
அழகோ தாங்கவில்லை உந்தன்
கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும்
வேண்டுமடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி

ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள்
பார்க்குதடி தேவதை இவளா
கேக்குதடி தன்னிலை மறந்தா
பூக்குதடி காற்றினில் வாசம்
தூக்குதடி

அடி கோவில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி


ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்

உன் முகம் பார்த்தால்
தோணுதடி வானத்து நிலவு
சின்னதடி மேகத்தில் மறைந்தே
பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம்
கேட்குதடி

அதை கையில் பிடித்து
ஆறுதல் உரைத்து வீட்டுக்கு
அனுப்பு நல்லபடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி

ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்