Aandavan Thoorigayil |
---|
ஆண்டவன் தூரிகையில்
நீ மானுட ஓவியம்
அரை நொடி கோபத்திலும்
உன் வண்ணம் போய் விடும்
யானை போல் தோன்றும் கோபம்
எறும்பாக தேய்ந்தே போகும்
காத்திருகாத்திரு
ஆத்திரம் சேர்த்தே வைக்கும்
பாத்திரம் இல்லை நெஞ்சம்
ஒரு வழி பாதை வாழ்க்கை மறவாதே
மறவாதே மனமே
சிறு தவறாலே உயிர் பறிபோகும்
மறவாதே மனமே வாழ்விலே
மறவாதே மனமே
உன் நிழல்கூட உன் கால் வரும்
மறவாதே மனமே வாழ்விலே
சூழ்நிலையின் கையில் நீயும்
சோழி என மாறிடலாமா
காற்றில் தூசு போல்
உன் காலம் போவதா
காய்ச்சு வெச்ச இரும்பின் மேலே
ஊற்றிடும் நீரை போலே
சீறி பாய்வதா
உன்னை கோபம் ஆள்வதா
யாரோ ஒரு இனியவனை
உன் சினம் பெரும் பகை ஆக்கிவிடும்
யாரோ ஒரு கொடியவனை
புன்னகை தோழமை ஆக்கி தரும்
ஆண்டவன் தூரிகையில்
நீ மானுட ஓவியம்
அரை நொடி கோபத்திலும்
உன் வண்ணம் போய் விடும்