Aaradha Kobamillai

Aaradha Kobamillai Song Lyrics In English


ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்

இது ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

நேற்று வரையில்
உன்னை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில்
உன்னை வைத்து ஏங்கினேனே

தூரம் குறையும்
என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிட சென்றேன் பிறகும்
தாகத்தில் நின்றேன்

குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்

ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா


பேசும்பொழுதே
சில வாரத்தை தடுமாறும்
தென்றல் நடுவே

தலை நீட்டி பேச பார்க்கும்
பார்க்கும் பொழுதே
இருகண்கள் கவிபாடும்
நானும் அதிலே

இடைவந்து போகுமே

இருவர் : அனுபவமில்லை
அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பொரு தொல்லை
எதிலும் அனுபமில்லை

ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்