Aariraro Ketathillai

Aariraro Ketathillai Song Lyrics In English


ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
நடப்பதோ முன்னிலே
மிதப்பதோ கனவிலே

ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே

ஆஆ ஆஆஆ ஓஓ
தலை எழுத்தை தவறுதலாய்
எழுதி வைத்தான் இறைவனடா
தவறு எனக்குண்டோ ஓஓஓஓ
குடும்ப சுகமில்லை குழந்தை
அருகிலில்லை

மடிகள் சுரந்து
கதறும் பசுவாய் அழைப்பது
என் நெஞ்சே ஓஓ அழுவதேன்
நெஞ்சே

ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே


மழையினிலே
நனைந்திருந்தேன்
வெயிலினிலே உலர்ந்து
வந்தேன் கருங்கல் சிலை
போலே ஓஓ ஓஓ பெயரும்
அறியாத ஓஓஓஓ பறவை
எச்சம் போட

முளைத்த விதை
நான் துயர் கதை நான் என்
பிள்ளை நன்றாக ஓஓ
இறைவன் அருள் செய்க

ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
நடப்பதோ முன்னிலே
மிதப்பதோ கனவிலே