Aariraro Ketathillai |
---|
ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
நடப்பதோ முன்னிலே
மிதப்பதோ கனவிலே
ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
ஆஆ ஆஆஆ ஓஓ
தலை எழுத்தை தவறுதலாய்
எழுதி வைத்தான் இறைவனடா
தவறு எனக்குண்டோ ஓஓஓஓ
குடும்ப சுகமில்லை குழந்தை
அருகிலில்லை
மடிகள் சுரந்து
கதறும் பசுவாய் அழைப்பது
என் நெஞ்சே ஓஓ அழுவதேன்
நெஞ்சே
ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
மழையினிலே
நனைந்திருந்தேன்
வெயிலினிலே உலர்ந்து
வந்தேன் கருங்கல் சிலை
போலே ஓஓ ஓஓ பெயரும்
அறியாத ஓஓஓஓ பறவை
எச்சம் போட
முளைத்த விதை
நான் துயர் கதை நான் என்
பிள்ளை நன்றாக ஓஓ
இறைவன் அருள் செய்க
ஆரிராரோ கேட்டதில்லை
எந்தன் வாழ்விலே ஆரிராரோ
பாட ஆசை இந்த நெஞ்சிலே
நடப்பதோ முன்னிலே
மிதப்பதோ கனவிலே