Aaru Maname

Aaru Maname Song Lyrics In English


ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை
ஆறு

ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி இன்பத்தில்
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு
செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம்
பத்தாகும்

இந்த இரண்டு
கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும்
உண்டாகும்

ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

உண்மையைச்
சொல்லி நன்மையைச்
செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்

நிலை உயரும்
போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை
வணங்கும்

உண்மை என்பது
அன்பாகும் பெரும் பணிவு
என்பது பண்பாகும்

இந்த நான்கு
கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும்
உண்டாகும்


ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

ஆசை கோபம்
களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்

அன்பு நன்றி
கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்

இதில் மிருகம்
என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்

இந்த ஆறு
கட்டளை அறிந்த
மனது
ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்

ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை
ஆறு

ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு