Aaruyire Manavare |
---|
ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே
காரிருளில் அகல் விளக்கைத்
தூது விட்டு நின்றேன்
காரிருளில் அகல் விளக்கைத்
தூது விட்டு நின்றேன்
அது காற்றினில் ஒளி இழந்து
திரும்பிடக் கண்டேன்
காற்றினில் ஒளி இழந்து
திரும்பிடக் கண்டேன்
ஓருயிரை உனக்கெனவே
வழியனுப்பி வைத்தேன்
ஓருயிரை உனக்கெனவே
வழியனுப்பி வைத்தேன்
அது உன்னிடமே தங்கியதால்
உயிரிழந்து நின்றேன்
ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே
காற்று மழை மின்னலையும்
கடந்து வந்தேன் ஐயா
காற்று மழை மின்னலையும்
கடந்து வந்தேன் ஐயா
நான் கண்ணீரில் எழுதி வைத்த
கதைகளெல்லாம் பொய்யா
கண்ணீரில் எழுதி வைத்த
கதைகளெல்லாம் பொய்யா
வந்த துன்பம் என்னுயிரை
எடுத்துக் கொண்ட போதும்
நான் மறுமுறை பிறக்கும்போது
மாலையிட்டால் போதும்
ஆருயிரே மன்னவரே
அன்பு மயில் வணக்கம்
உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்
புரியவில்லை எனக்கும்
ஆருயிரே மன்னவரே